Sunday, February 12, 2012

கல்லறை தூக்கம்


கசந்து போன
வாழ்க்கையில்
கரைந்துவிட்டேன்...,
இனியும்
நீ எனக்கில்லை
என்றால் .,
எனது
தூக்கம் கல்லறையில்
மட்டுமே.........!!!


வைரமுத்து வரிகள்

உன்னோடு நானிருந்த 
ஒவ்வொரு 
மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் 
மறவாது கண்மணியே...!
தொண்ணூறு நிமிடங்கள் 
தொட்டணைத்த காலந்தான், 
எண்ணூறு ஆண்டுகளாய் 
இதயத்தில் கலக்குதடி..,
பார்வையிலே சில நிமிடம்,
பயத்தோடு சில நிமிடம், ,
கட்டியணைத்தபடி 
கண்ணீரில் சில நிமிடம் ,
இலக்கணமே பாராமல் 
எல்லா இடங்களில் 
முத்தங்கள் விதைத்த 
மோகத்தில் சில நிமிடம்., 

உன்னோடு நானிருந்த 
ஒவ்வொரு 
மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் 
மறவாது கண்மணியே...!

எது நியாயம், எது பாவம், 
இருவருக்கும்  தோன்றவில்லை,
அது இரவா, அது பகலா,
அதுபற்றி அறியவில்லை..,
யார் தொடங்க , யார் முடிக்க,
ஒரு வழியும் தோன்றவில்லை,
இருவருமே தொடங்கிவிட்டோம் 
இதுவரைக்கும் கேள்வியில்லை....!!
அச்சம் கலைந்தேன்,
ஆசையினை நீ அணிந்தாய்..
ஆடை கலைந்தேன்,  
வெட்கத்தை நீ  அணிந்தாய்..
கண்ட திருக்கோலம் 
கனவாக மறைந்தாலும்,
கடைசியில் அழுது 
கண்ணீர் 
கையில் இன்று முட்டுதடி...!!

உன்னோடு நானிருந்த 
ஒவ்வொரு 
மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் 
மறவாது கண்மணியே...!

                          - வைரமுத்து -