Sunday, April 1, 2012

உறக்கத்தின் துளிகளை
கரைத்து,
வார்த்தைகளாக
தெளிக்கிறேன்...,
கண்களில் குருதிபடிய
கவிதைகளாக கரைகிறேன்..,
பெண்ணே
உன் நெஞ்சத்தில்
எனை அறிவாய்...,
காட்சிப்பொருளாகவே
என்ன வேண்டாம்..,
இந்த அருவிக்கும்
தாகமிருப்பதை
உணர்ந்துபாரடி...!!!
சாலையோர செடியாக
புழுதி படர்ந்து
கிடக்கிறேன்..,
எனை
பூக்களாய் மாற்ற
வேண்டாம்..,
பிடுன்கியாவது எரிந்து விடு..!!
நிம்மதியாக
நித்திரையை  தேடிக்கொள்வேன்......

                                    நாகோ.......