Saturday, March 31, 2012

கண்ணீர் துளிகள்
சிந்தாமல் காக்கிறேன்
பெண்ணே..,
அனைத்தையும்
காதலுக்காக கரைய வைக்க...,
அழுகை என்பது
ஆறுதலின் மொழிதானோ.,
அன்பை ஏற்று
அழுத காலங்கள் எல்லாம்,
ஆறுதல் சொல்லவும்
மறுக்கின்றன ..,
உன்னிடம் பேசாத
இத்தனை நேரமும்
என் இதயத்தின்
இறுதி நாட்களை
எண்ணி கொண்டிருக்கின்றன...!!
பேச நினைக்கும்போது
ஊமையாக்கினாய்..,
சிரிக்க நினைத்தால்,
சோகத்தை பரிசளித்தாய்..,
கல்லறையை வேண்டியபோது
மட்டும் .,
கண்மூடிக்கொண்டே கரம்
காட்டுகிறாயே பெண்ணே நியாயமா...!!!

                                    ரசிகன் நாகோ...        

No comments:

Post a Comment