Tuesday, September 3, 2013

என் செய்கையை
கண்டு
நீ சிரித்தாய்
என்றார்கள்..,
அது ஏனோ,
எனைக்கண்டு
நீ சிரிப்பதை,
நான் ரசிக்க
நேரம் தர மறுத்துவிடுகிறாய்...!!
உன்னையே ரசிக்கும்
நேரங்களில் எல்லாம்
உன் புன்னகை
வெளிவர மறுப்பதேனடி...!!
உன்
தேன் சிந்தும்
புன்னகையில்
புதைந்து விடத்தான்
பார்க்கிறேன்..,
பாவம் இவன்
பைத்தியம் என்றாவது
புன்னகைத்துவிட்டு போயேன்...!!!
என்னடி பாவம்
செய்தேன்...,
உன் புன்னகையை
போர்வைக்குள் மறைத்து
வைத்து ..,
என்னை
பூமிக்குள் புதைக்க
நினைக்கிறாய்......!!!
உன் இதழ்களின்
ஈரச்சுவையை..,
சிரிப்பெனும்
சிறப்பு விருந்தில்..,
நான் ருசிக்கும் நேரம் எப்போதோ.....!!!

புன்னகை வேண்டி ..., 

நாகோ ...

No comments:

Post a Comment