Thursday, October 24, 2013

மறவேனடி ......


விழிகளை மூடியும்
விழித்திருந்தேன்.....,
உன்னை மறக்கும்
எண்ணம்
ஒருபோதும்
ஓங்கியதில்லை ..!!
கனவுகளின் தேவதையாய்.,
கவிதைகளின் நாயகியாய் .,
எண்ணங்களின் காரணமாய்
நின்று போனாயே ..,
எப்படி மறப்பேன் ..??
உன் அதரச்
சிவப்பினில்
உதிரம் உறைய
நின்ற காலத்தை
எப்படி மறப்பேன்..??
மண்ணுக்குள் ரகசியம்
தேடி..,
கன்னத்தில் நாணல் கொண்ட
உன் முகத்தை
எப்படி மறப்பேன் ..??
ஆண்களின் வெட்கம் கூட
அழகுதான்
என்றுணர்த்திய
உன்னை எப்படி மறப்பேன்..??

மறவேனடி,

மனம் நினைக்க
மறுத்தால் ,
மரணத்தில் ஐயமில்லை..!!

சுழலும் பூமி
நிழலை அடைந்தாலும்
நினைவை மறவேனடி...!!!

                    என்றென்றும் உன் நினைவுகளுடன் ..,
                                      
                                                      - நாகோ -

No comments:

Post a Comment